Sunday, April 03, 2011

உலகக்கோப்பை Finals - உச்சம் தொட்ட இந்தியா


முதல் முறை டாஸ் செய்தபோது ஏற்பட்ட குழப்பத்தால், மீண்டும் செய்த டாஸில் சங்கக்காரா வென்று, பேட்டிங்கை தேர்வு செய்தார்! இந்திய மீடியா சங்கக்காரா ஏமாற்றியது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பெருமுயற்சி எடுத்தது ! எதிர்பார்த்தது போல, நெஹ்ராவுக்கு பதில் அணியில் இடம் பெற்ற ஸ்ரீசாந்த் மோசமாக பந்து வீசினார். பெரிய இடைவெளிக்குப் பின் திடீரென்று ஒரு முக்கிய ஆட்டத்தில் ஆட நேர்ந்தால் இப்படி ஆகலாம் என்பதும் எதிர்பார்த்தது தான்! சாகீரின் நிபுணத்துவம் (அவரது முதல் 3 ஓவர்களும் மெய்டன்கள்!) முதல் 10 ஓவர்களில், இலங்கை பேட்டிங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தரங்காவின் விக்கெட்டையும் சாகீர் வீழ்த்தினார், 31/1. இந்த உலகக்கோப்பையில் முதல் பவர் பிளேயில் இலங்கை எடுத்த மிகக் குறைவான ரன்கள் இது.

The initial phase belonged to India. இலங்கை துவக்க ஆட்டக்காரர்களை இழந்து 18 ஓவர்களில், தத்தி தத்தி 65 ரன்களை எடுத்திருந்தது. தங்கள் மிடில் ஆர்டர் அத்தனை பலமானதில்லை என்பதை உணர்ந்து, சங்கக்காராவும், ஜெயவர்த்தனேயும் கவனமாக ஆடினாலும், ரன்கள் steady-ஆக வந்த வண்ணமிருந்தன. யுவராஜ் பந்துவீச்சில் சங்கக்காரா விக்கெட் இழந்தபின் (122/3, 28 ஓவர்கள்) மஹிளா தனது அனைத்து அனுபவத்தையும் ஆட்டத்தில் கொணர்ந்து ஆடியது தான் இலங்கை இன்னிங்க்ஸின் ஹைலைட்! அவரது touch play மற்றும் பந்தை ஃபீல்டர்களுக்கு நடுவே நுணுக்கமாக செலுத்தும் திறன் ஆகியவை அவர் ஒரு world class batsman என்பதை நிரூபித்தன.

நடு ஓவர்களில் ஹர்பஜன், முனாஃப், யுவராஜ் ஓரளவு சிறப்பாக பந்து வீசியதால், 45 ஓவர்கள் முடிந்தபோது, ஸ்கோர் 211/5. யுவராஜ், சாகீர் தலா 2 விக்கெட்டுகள், ஹர்பஜன் 1. இந்த உலகக்கோப்பையில், முதன்முதலாக சாகீரின் "death-overs" பந்து வீச்சு மிக மோசமானதாக அமைந்து விட்டது நமது துரதிருஷ்டம் என்று தான் கூற வேண்டும். Length ball, full toss என்று வீசியதில், மட்டையை சரியாக பிடிக்கத் தெரியாத குலசேகரா, ஃபெரெரா போன்றவர்கள் விளாசியதில் 5 BPP ஓவர்களில் (46-50) 63 ரன்கள் கிட்டின! யாருமே எதிர்பார்க்காதது இது! மஹிளா 48வது ஓவரில் சந்தடியில்லாமல், தனது சதத்தை எட்டினார்.

இலங்கையின் மொத்த ஸ்கோர் 274. தனது முதல் 7 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே தந்த சாகீர், அவரது இறுதி 3 ஓவர்களில் 44 ரன்கள் வாரி வழங்கியதை Absolute Shocker என்று தான் கூற வேண்டும்!! ஆடுகள நிலைமை பெரிய அளவில் மாறாத சூழலில், 275 என்பது நமது பேட்டிங்கை கொண்டு துரத்தவல்ல இலக்காகவே தோன்றியது. மிதமான பயமும், ரென்ஷனும் வயிற்றைக் கவ்வியிருந்ததென்னவோ உண்மை தான் :-)

இந்தியா பேட்டிங்:
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு இறுதியாட்டத்தில் எந்த அணியும் வெற்றிகரமாக துரத்தாத ஓர் இலக்கை அடைய ஒரு நல்ல துவக்கம் மிக அவசியமானது என்ற எண்ணம் பலருக்கும் இருந்திருக்கும். சச்சின், சேவாக் இருவரில் ஒருவர் ஒரு 'பெரிய' நூறு எடுத்தால் மட்டுமே இது சாத்தியம் என்று டிவிட்டரில் நானே பதிவு செய்திருந்தேன்! ஆனால், இன்னிங்ஸின் முதல் மலிங்கா ஓவரில், சேவாக் எல்.பி.டபிள்யு :(

சேவாக் ஒரு 3-4 ஓவர்களுக்குப் பிறகு (அதான், முதல் பவர் பிளேயில் 10 ஓவர்கள் இருக்கின்றனவே!) shuffle across செய்து leg side-ல் பவுண்டரி அடிக்க முயல்வது நல்லது, அல்லது, inside out ஷாட் கூட ஆடுவது இதற்கு பரவாயில்லை! சச்சின் குலசேகரா ஓவரில் 2 பவுண்டரிகள் effortless ஆக அடித்தது நம்பிக்கையைத் தந்தாலும் மலிங்காவின் பந்து வீச்சில் 7வது ஓவரில் சங்கக்காராவுக்கு கேட்ச் கொடுத்து விக்கெட்டிழந்தார் :( அரங்கை மயான அமைதி கவ்வியது, உண்மையில் எனக்கும் நம்பிக்கை போய் விட்டது! ஸ்கோர் 32/2

ரென்ஷன் சற்று அதிகமாக இருந்ததால், பக்கத்துத் தெருவில் இருக்கும் நண்பர் வீட்டுக்குச் சென்றேன் (நண்பர் பெயர் பிள்ளையார்!) அர்ச்சகரும் கிரிக்கெட் ஆர்வலர். 2 விக்கெட்டுகள் காலி என்று நான் கூறியவுடன், துளியும் நம்பிக்கை இழக்காமல், "சச்சின், சேவாக் மட்டும் தான் இந்திய அணியா? இன்னிக்கு கம்பீர் 100 அடிப்பார். கோலியும், தோனியும் கூட நிச்சயம் அசத்துவார்கள், வெற்றி உறுதி, நாளைக்கு வந்து சொல்லுங்க!!!" என்று அசால்டாக கூறினார். அவர் சொன்னது போலவே, கௌதியும், கோலியும் பெரிய அளவிலான அழுத்தத்தை உள் வாங்கிக் கொண்டு அற்புதமாக ஆடினர் என்றால் அது மிகையில்லை. அதே நேரம், ரன்கள் எடுத்த வண்ணம் இருந்ததால், ரன் ரேட் 5.5 க்கு குறையவில்லை.

மீண்டும் ஒரு திடுக் திருப்பம். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கோலி, தில்ஷனின் படு சுமாரான பந்து வீச்சுக்கு அவுட்டானார். ஸ்கோர் 115/3 (22 ஓவர்கள்). யுவராஜுக்கு பதில், 'கப்தான்' தோனி களமிறங்கினார்! முரளி, ரந்திவ், தில்ஷன் என்று 3 off spinners இலங்கை அணியில் இருந்ததால், இடது கை ஆட்டக்காரர் யுவராஜை (மற்றும் ரெய்னாவை) துரத்தலின் இறுதிக்கட்டத்துக்கு வைத்திருப்பது நல்லது என்று தோனி கருதியிருக்கலாம். மேலும், இடது-வலது பேட்டிங் காம்பினேஷன் களத்தில் ஆடுவதும் நல்லது தானே! Dhoni mentioned later that he wanted to take responsibility in that crunch situation and guide the team closer towards the target.

ஃபார்மில் இல்லாத காரணத்தால், தொடக்கத்தில் தோனியின் ஆட்டத்தில் மிகுந்த கவனம் தெரிந்தது. ஆனால், கம்பீர் ஆடிய விதம் கேப்டனுக்கு நிச்சயம் நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். 1-டவுனில் கம்பீர் ஆடுவது இந்திய அணிக்கு ஒரு வரப்பிரசாதம்! சுழற்பந்து/வேகப்பந்து என்று இரண்டையும் சுலபமாக கையாள்வதுடன், ரிஸ்க் அதிகம் எடுக்காமல், ரன் சேர்ப்பதில் தேக்கமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது கம்பீரின் Speciality! சங்கக்காராவின் பந்துவீச்சு மாற்றங்கள் பலன் எதுவும் தரவில்லை. இதற்கு முரளி (உடல் நிலை காரணமாக) off colour ஆக இருந்ததும் ஒரு முக்கியக் காரணம். கம்பீரும் தோனியும் முரளியில் tricksக்கு ஒத்துழைப்பு தர மறுத்து கவனமாக ஆடியதும் மற்றொரு காரனம் :-) அஜந்தா மென்டிஸ் இல்லாததும் ஒரு குறையே.

முக்கியமான ஆட்டத்தில், உலகக்கோப்பையில் தனது முதல் அரைச்சதத்தை (52 பந்துகள்) தோனி பதிவு செய்தார். ஃபார்மில் இல்லாத நிலையில், playing under great pressure, ஆடுகளம் பேட்டிங்குக்கு அத்தனை கடினமாக இல்லாவிட்டாலும் கூட, தோனியின் இந்த ஆட்டம் மிக்க பாராட்டுக்குரியது! அதற்காக, முந்தைய ஆட்டங்களில் தோனி செய்த சில சொதப்பல்களை நான் விமர்சித்தது, தேசியத்துக்கு எதிரான குற்றம் என்று ஒரு சில தோனி ரசிகர் மன்ற pseudo-patriotic தொண்டரடிப்பொடிகள் பொங்கினால், நான் என்ன செய்ய! தோனியே கூட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தான் ஆடுகளத்தை சரியாக கணிக்கத் தவறியதை ஒரு பேட்டியில் கூறியிருந்ததை நினைவு கூர்கிறேன்.

ஒரு Gem of an innings ஆடிய கௌதி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்திருக்க வல்ல சதத்தை தவறவிட்டது வருத்தத்தைத் தந்தது. 97 ரன்களில், அதுவும் ஃபெரெராவின் உருப்படாத பந்துவீச்சில், அடிக்கப் போய், அனாவசியமாக ஆட்டமிழந்தார்! Gambir actually deserved that glory for the calmness he displayed under pressure & the way he anchored the Indian innings in a make or break situation after the cheap dismissal of both Sachin and Sehwag! யுவராஜ் களமிறங்கினார்.

இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. கடைசி 5 (பவர் பிளே) ஓவர்களில் இந்திய வெற்றிக்கு 30 ரன்களே தேவை என்ற நிலையில், தோனியின் அதிரடித் தாக்குதலில் 48.2 ஓவர்களிலேயே ஒரு சிக்ஸர் வாயிலாக, மகத்தானதொரு வெற்றியும், 28 வருட காத்திருப்புக்குப் பின் உலகக்கோப்பையும் இந்தியாவின் வசம் வந்தது!!!! தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, தனது பணியை செவ்வனே செய்து முடித்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. It was good that Dhoni finished the job himself without expecting others below to achieve the victory. இந்த வெற்றியின் மூலம், கபில்தேவின் தனிமையும் விலகியது :) இந்தியாவே விழாக் கோலம் பூண்டது! எனது தெருவில் ஒரு 10 நிமிடங்களுக்கு இடைவிடாத வேட்டுச்சத்தம்!

சச்சின் இந்த வெற்றியை தனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான/பெருமையான தருணம் என்று கூறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை! 20 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின் 6வது முயற்சியில் கிடைத்த பொக்கிஷமல்லவா இந்த உலகக்கோப்பை! ஆட்ட நாயகன் தோனி, அந்த விருதை கம்பீருடன் பகிர்ந்து கொள்வதாக அறிவிப்பார் என்று எதிர்பார்த்தேன்! இதை ஒரு குறையாக கூறவில்லை. யுவராஜ் உலகக்கோப்பைத் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஒரு சமயத்தில், இந்திய அணியிலிருந்த விலக்கப்பட்டு, (முக்கியமாக) உலகக்கோப்பைக்காக அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட யுவராஜுக்கு இதை விட என்ன பெருமை இருக்க முடியும்!!!

Tail piece:
இந்தியாவுடன் கம்பேர் செய்தால், ஸ்ரீலங்கா அணியில் சங்கக்காரா, மஹிளா, முரளி, மலிங்கா தவிர்த்து மற்றவர் ஒப்புக்குச் சப்பாணிகள் என்பதால் தான், அதை சுமாரான அணி என்று முன்னர் எழுதினேன். இவர்கள் நால்வரிடமும் இந்தியா உஷாராக இருப்பது அவசியம் என்றும் முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்! அது போலவே, முரளி தவிர மற்ற மூவரும் பரிமளித்ததால் தான், இந்த இறுதி ஆட்டம் மிக சுவாரசியமான ஒன்றாக அமைந்தது!

இந்த உலகக்கோப்பை கனவு நனவானதற்கு, இந்திய அணியின் (துளியும் ஆர்ப்பாட்டம் இல்லாத!) பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனின் அபாரமான பங்களிப்பு ஒரு முக்கியக் காரணம்! 2007 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணியை அரவணைத்து, பல கஷ்டங்களை சமாளித்து, திட்டங்களை வகுத்து, இந்த உலகக்கோப்பை உச்சத்தை அடைய (அப்பாடா, இடுகை தலைப்பு இடுகையில் வந்தாச்சு ;)) அடி கோலிய இவரை Gary Potter என்று அழைக்கலாம் :-)

In the final conclusion, both MS Dhoni and SR Tendulkar are Destiny's Children and realization of this World Cup Dream is just testimony to that ever lasting fact !!!

Passing Shot:
சூப்பர் ஸ்டார் (அரங்கில்) பார்வையாளராக இருந்த ஓர் ஆட்டத்தில் இந்தியா தோற்றுப் போகும் என்பது கூட கனவிலும் நடக்க முடியாத ஒரு விஷயம் தானே ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

http://balaji_ammu.blogspot.com

9 மறுமொழிகள்:

ISR Selvakumar said...

சூப்பர் ஸ்டார் படம் போலவே (பிள்ளையார் பக்தி கலந்த) விறுவிறு பதிவு.
மனதில் ஒவ்வொரு பந்தும் பதிந்திருக்கிறது என்றாலும், உங்கள் (pseudo-patriotic போன்ற)வர்ணனையால் கடைசி பால் சிக்ஸர் போல இருந்தது.

Bruno said...

//Passing Shot:
சூப்பர் ஸ்டார் (அரங்கில்) பார்வையாளராக இருந்த ஓர் ஆட்டத்தில் இந்தியா தோற்றுப் போகும் என்பது கூட கனவிலும் நடக்க முடியாத ஒரு விஷயம் தானே ;-)
//

கிரிக்கெட் ரஜினியை பார்த்தது :) :)

--

மீதி எல்லாம் நீங்களே கூறிவிட்டீர்கள்

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

சூப்பர் பாலா!!(இவ வில் படித்து விட்டேன்) ... என் நண்பர்கள் எல்லாம் இந்தியா பேட்டிங் பண்ணியபோது, நகத்தைக் கடித்துக்கொண்டு "ரென்ஷனில்" இருந்த போழ்தே எனக்கு நம்பிக்கை இருந்தது! காரணம் பேட்டிங் சரியான graphல் போய்க்கொண்டிருந்தது தான்! இந்த ஸ்கோர் இல்லாதிருந்தால் ஆட்டத்தில் இவ்வளவு விறு விறுப்பு இருந்திருக்காது!!
நம்ம சைடு வந்துட்டு போங்களேன்!

http://sagamanithan.blogspot.com/

A Simple Man said...

it was a perfect innings like the construction of a building.
Sehwag started with a dig (savakk uzhi :-)) but sachin expanded it a bit to change it from the graveyard to the foundation for the building) Kohli filled up that foundation ... Gambhir erected the pillars & cemented.. then Dhoni built it and finally yuvaraj finished the roofing. Hats off to INDIA

said...

Again, I come to the same point.
Comparing to Lalitha Ram's chess commentary, Bala's cricket coverage is pathetic. Chess commentary was very deep yet humble and simple. Cricket commentary was shallow and with an inflated hype. "Pathetic" bala.

Please demonstrate your capacity by writing good articles and not by writing angry reply to comments.

enRenRum-anbudan.BALA said...

Selva, Dr.Bruno,

Thanks.

சகமனிதன்,
I read some of your posts. Sorry that I did not write any comment.

A Simple man,
Super analogy :)

enRenRum-anbudan.BALA said...

"Pathetic" and Hopeless Anony,

I gave you such a response in IV blog as your cricketing knowledge seemed to be a blob :-) Its clear that you are just a 'vindictive' type MORON !

I am not really angry, just pointing out your fundamental deficiencies! You display your stupidity when you say that a commentary should be "humble". Pl. learn proper usage of English words, first.

I dont have to prove ANYTHING to a miserable 'anonymous' moron (who lack the courage to display your identity in public) like you! I have written umpteen posts on various subjects in my blog for over 6 years & enjoy good readership.

As I mentioned in that IV post, Please do try to have some life away from cricket and also chess ;-)

//Chess commentary was very deep
//
BTW, How many meters deep ;-)

I request you not to talk anything about Chess (which needs use of a vital organ called brain that you dont seem to possess).

saravananfilm said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.http://www.filmics.com/tamilshare

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

jai ho

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails